Published : 13 Oct 2015 07:29 AM
Last Updated : 13 Oct 2015 07:29 AM

வழக்கறிஞர் - போலீஸார் இடையே நம்பிக்கை இல்லாத சூழ்நிலையில் மத்திய படை பாதுகாப்பு அவசியம்: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் உத்தரவு

உயர் நீதிமன்றத்தில் வழக்கறி ஞர்கள் காவல்துறையினருக்கு இடையே பரஸ்பரம் நம்பிக்கை இல்லாத தற்போதைய சூழ்நிலை யில், சிறிது காலத்துக்காவது உயர் நீதிமன்ற பாதுகாப்பை நிபுணத்துவம் பெற்ற ஒரு சுதந்திரமான அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி கடந்த மாதம் 14-ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் முதல் அமர்வு நீதிமன்றத்துக்குள் தலைமை நீதிபதி எதிரில் அமர்ந்து வழக்கறிஞர்களும், சட்ட மாணவர்களும் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்து அதனை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளையின் பாதுகாப்பை மத்திய தொழில் பாது காப்புப் படை அல்லது வேறு சிறப்பு அமைப்பிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இவ்வழக்கு, கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, உயர் நீதிமன்றத்துக்கு மத்திய பாது காப்புப் படை தேவையில்லை என்றும் தமிழக காவல்துறையினரே போதும் என்றும் அரசு தெரிவித்தது.

இந்நிலையில், இவ்வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘‘சென்னை உயர் நீதிமன்றத்தில் 108 நீதிமன்றங்கள் உள்ளன. இங்கு 525 காவல்துறையினர் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அதுபோல, 18 நீதிமன்றங்களுடன் அமைந்துள்ள உயர் நீதிமன்ற மதுரை கிளையில், 217 காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நுழைவு வாயில்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தேவையான அளவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. எனவே, உயர் நீதிமன்றத்துக்கு மத்திய பாதுகாப்புப் படை தேவையில்லை” என்று கூறப்பட்டிருந்தது.

மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன் வாதிடுகையில், ‘‘உயர் நீதிமன்றப் பாதுகாப்பு குறித்து உள்துறை செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. உயர் நீதிமன்றத்துக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படை தேவையில்லை என்று தமிழக அரசு கூறுவதால், அதையும் மீறி மத்திய படை பாதுகாப்பு அளிப்பது என்று முடிவெடுத்தால் பிரச்சினை ஏற்படக்கூடும் என்று கருதுகிறோம்’’ என்றார்.

தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமையாஜி வாதிடுகையில், ‘‘சென்னை மற்றும் மதுரையில் உள்ள உயர் நீதிமன்றங்களுக்கு மத்திய பாதுகாப்புப் படை தேவையில்லை என்று மத்திய உள்துறை செயலாளருக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது’’ என்று தெரிவித்தார்.

அப்போது, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் கூறுகையில், ‘‘உங்கள் வாதத்தை ஏற்க முடியாது. வழக்கறிஞர்கள் காவல்துறையினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினைக்குப் பிறகு இருதரப்பினரிடமும் இணக்கமான சூழல் இல்லை. அதனால், இருதரப்பினரிடமும் சுமுகமான சூழல் ஏற்படும் வரை உயர் நீதிமன்றத்துக்கு மத்திய பாதுகாப்புப் படை அல்லது நிபுணத்துவம் பெற்ற சுதந்திரமான ஒரு அமைப்பின் மூலம் சிறிது காலத்துக்காவது பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

எங்களைப் பொருத்தவரை தமிழக காவல்துறையினரின் திறமை மீது எந்த சந்தேகமும் இல்லை. குறைந்தது 6 மாதங் களாவது மத்திய பாதுகாப்புப் படை அல்லது சிறப்பு அமைப் பிடம் உயர் நீதிமன்ற பாதுகாப்பை வழங்க வேண்டும். சுமுகமான சூழல் ஏற்பட்ட பிறகு தமிழக காவல் துறையினரிடம் பாதுகாப்பை ஒப்படைக்கலாம்’’ என்றார்.

அதைத்தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி.பால் கனகராஜ், வழக்கறிஞர்கள் காசி ராமலிங்கம், யானை ராஜேந்திரன் ஆகியோரும் உயர் நீதிமன்ற பாதுகாப்பு தொடர்பாக வாதிட்டனர்.

வாதம் முடிந்த பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

வழக்கறிஞர்கள் காவல் துறையினர் இடையே பரஸ்பரம் நம்பிக்கை இல்லாத தற்போதைய சூழ்நிலையில், உயர் நீதிமன்றத்துக்கு நிபுணத்துவம் பெற்ற ஒரு சுதந்திரமான அமைப்பு மூலம் உயர் பாதுகாப்பு வழங்க வேண்டிய அவசியம் இருக்கிறது. அவ்வாறு வழங்கினால், தற்போதைய சூழல் மாறி, சுமுக மான சூழல் உருவாகும். பாது காப்புப் பணியில் தமிழக காவல் துறையினரை விலக்கிக் கொள் ளாமல், கூடுதலாக சுதந்திரமான அமைப்பைக் கொண்டு பாது காப்பு அளிக்கலாம். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 30-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x