Published : 15 Dec 2020 03:14 AM
Last Updated : 15 Dec 2020 03:14 AM

தமிழகம், புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் 4 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு

தமிழகம், புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சிகாரணமாக 15-ம் தேதி (இன்று) கடலோர தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

16-ம் தேதி (நாளை) முதல் 18-ம் தேதி வரை தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் ஒருசிலஇடங்களில் மிதமான மழையும்,ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும். உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x