Published : 05 Oct 2015 09:17 AM
Last Updated : 05 Oct 2015 09:17 AM
தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தளியில் 4 செ.மீ., திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், கடலூர், காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூரில் 3 செ.மீ. மழை நேற்று முன் தினம் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில் அதிக மழை கிடைக்காது என்றாலும், ஒரு சில மாவட்டங்களில் அதிக அளவு மழை கிடைக்கும்.
கடந்த சில நாட்களாக வட மாவட்டங்களில் அதிக மழை பெய்து வருகிறது. வெப்பச் சலனம் காரணமாக வட மாவட்டங்களில் 2 நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT