Published : 29 Oct 2015 09:44 AM
Last Updated : 29 Oct 2015 09:44 AM
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாமக வின் இளைஞர் எழுச்சி மாநாடு வரும் நவம்பர் 14-ம் தேதி நடை பெற உள்ளது. இதற்கான ஆலோ சனை கூட்டம் கூடுவாஞ்சேரியில் நேற்று நடைபெற்றது.
இதில், பங்கேற்ற ராமதாஸ், மாநாட்டுக்கு திரளான இளைஞர் கள் பங்கேற்கும் வகையில் பணி யாற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகிகளை அறிவுறுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: தமிழகம் தற்போது நோய்வாய்ப் பட்டுள்ளது.
அதை குணப்படுத்த மருத்துவர் அன்புமணி ராமதாஸ் உள்ளார். தமிழகத்தில் தற்போது பாமக ஆட்சி அமைவதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளது.இதனால், வரும் 2016-ம் ஆண்டு சட்ட மன்ற தேர்தலில் பாமக ஆட்சியை பிடிக்கும். இதில், மாற்றம் ஏதும் இருக்காது. இது உறுதி என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT