Published : 10 Nov 2020 03:12 AM
Last Updated : 10 Nov 2020 03:12 AM
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் புதிய ஆதார் அட்டை மற்றும் ஆதார் அட்டையில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான பிரிவு செயல்பட்டு வருகிறது.
இங்கு, திருக்கழுக்குன்றம் வட்டத்துக்கு உட்பட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள்ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்து பெற்று வருகின்றனர். இந்த ஆதார் பிரிவில் டோக்கன் முறை பின்பற்றப்படுவதாகவும், நாள் ஒன்றுக்கு 40 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படுவதாகவும் தெரிகிறது.
இதனால், டோக்கன் பெறுவதற்காக வட்டாட்சியர் அலுவலகத்தில் காலை 6 மணிமுதலே மக்கள் வரிசையில் நின்று டோக்கன் பெற்று வருகின்றனர். இதனால், ஆதார் பெறுவதற்காக தொலை தூரகிராமங்களில் இருந்து வருபவர்கள் டோக்கன் கிடைக்காமல், ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்லும் நிலை உள்ளது. எனவே புதிய ஆதார் அட்டைபெறுவதில் தாமதம் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT