Published : 07 Nov 2020 03:14 AM
Last Updated : 07 Nov 2020 03:14 AM
கமல்ஹாசன், சரத்குமார் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து சைபர் கிரைம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
எழும்பூரில் செயல்படும் காவல் துறை தலைமை கட்டுப்பாட்டு அறையை நேற்று இரவு தொடர்பு கொண்ட மர்ம நபர், நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சரத்குமார் வீடுகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து போலீஸார் வெடிகுண்டு நிபுணர்களுடன் கொட்டிவாக்கத்தில் உள்ள சரத்குமார் வீடு, ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் வீடுகளில் சோதனை நடத்தினர்.
இதில் வெடிகுண்டுகள் சிக்காததையடுத்து, இந்த மிரட்டல் வதந்தி என தெரியவந்தது. இதையடுத்து மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து சைபர் கிரைம் போலீஸார் உதவியுடன் விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT