Published : 08 Oct 2020 07:27 AM
Last Updated : 08 Oct 2020 07:27 AM

பாரத ஸ்டேட் வங்கியின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு

பாரத ஸ்டேட் வங்கியின் புதிய இயக்குநராக தினேஷ் குமார் காரா நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடந்த 1984-ம் ஆண்டு பாரத ஸ்டேட் வங்கியில் பணியில் சேர்ந்த இவர், வங்கித் துறையில் 35 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக, ரீடெய்ல், கார்ப்பரேட் கிரெடிட் மற்றும் சர்வதேச வங்கியில் அனுபவம் பெற்றுள்ளார். பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் 5 துணை வங்கிகளின் இணைப்பில் முக்கியப் பங்காற்றியுள்ளார்.

மேலும், எஸ்பிஐ ஃபண்ட்ஸ் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராகவும் பதவி வகித்துள்ளார். அப்போது, அந்நிறுவனத்தை நாட்டில் உள்ள 5-வது மிகப் பெரிய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமாக தரம் உயர்த்தினார். பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x