Last Updated : 06 Oct, 2020 06:56 PM

 

Published : 06 Oct 2020 06:56 PM
Last Updated : 06 Oct 2020 06:56 PM

பாலியல் வழக்கில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஜாமீன் மனு தள்ளுபடி

மதுரை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசனின் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நாகர்கோவிலைச் சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்தத் தொகுதியின் அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசனை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் அவர் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.

அதில், பாலியல் சம்பவம் 2017-ல் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அப்போது எந்தப்புகாரும் அளிக்கவில்லை. உள்நோக்கத்துடன் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், மனுதாரர் ஏற்கெனவே ஜாமீன் மனு தாக்கல் செய்து தள்ளுபடியாகியுள்ளது. தற்போது மீண்டும் மனுத் தாக்கல் செய்துள்ளார். வழக்கில் விசாரணை முடியவில்லை. ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது. ஜாமீன் வழங்கக்கூடாது என்றார்.

இதையடுத்து, மனுவை திரும்ப பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது, அதற்கு அனுமதி வழங்கி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x