Published : 05 Oct 2020 07:18 AM
Last Updated : 05 Oct 2020 07:18 AM

சிபிசிஎல் தொழில்நுட்ப இயக்குநர் சங்கர் பொறுப்பேற்பு

சிபிசிஎல் நிறுவனத்தின் புதிய தொழில்நுட்ப இயக்குநராக எச்.சங்கர் கடந்த அக்.1-ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஐதராபாத்தில் உள்ள ஓஸ்மானியா பல்கலைக்கழகத்தில் 1991-ல் இயந்திரவியல் பொறியியல் பட்டமும், மஹாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டமும் பெற்றுள்ளார்.

ஐஓசிஎல் நிறுவனத்தின் ஹால்டியா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் 1992-ல் பயிற்சி பொறியாளராக சேர்ந்த இவர், கடந்த 28 ஆண்டுகளில் ஹால்டியா, வடோதரா, பானிபட் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், புதுடெல்லியில் உள்ள சுத்திகரிப்பு நிலைய தலைமையகத்தில் பணிபுரிந்துள்ளார். சுத்திகரிப்பாலை நிர்வாகம், திட்ட மேலாண்மை, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பிரிவுக ளில் அனுபவம் கொண்டவர். குவைத் தேசிய பெட்ரோலிய நிறுவனத்தில் பிரநிதியாக இருந்துள்ளார்.

ஐஓசிஎல் நிறுவனத்தின் பரவுனி சுத்திகரிப்பு ஆலையில் பிஎஸ்-IV மற்றும் பிஎஸ்-VI தரத்திலான எரிபொருள் தயாரிப்பு திட்டத்தில் முக்கியப் பங்காற்றியுள்ளார். பல திட்டங்களில் விரிவாக்கப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x