Published : 03 Oct 2020 05:37 PM
Last Updated : 03 Oct 2020 05:37 PM

கடந்த 4 ஆண்டுகளில் பொறியியல் பட்டம், பட்டயம் பெற்றவர்களுக்கு ஒரு வாய்ப்பு: ஓராண்டுப் பயிற்சிக்கு பொதுப்பணித்துறை விண்ணப்பம் வரவேற்பு

சென்னை

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் சிவில், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் பொறியியல் பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில் ஓராண்டுப் பயிற்சிக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பு:

“தமிழ்நாடு, பொதுப்பணித் துறை, தொழிற் பழகுநர் வாரியம் (தென் மண்டலம்) ஒத்துழைப்புடன், 2017, 2018, 2019 மற்றும் 2020 ஆகிய வருடங்களில் தமிழ்நாட்டிலிருந்து, பட்டம் மற்றும் பட்டயம் (Civil, EEE & ECE)) ஆகிய பிரிவுகளில் துறைகள் தேர்ச்சியுற்ற பொறியாளர்களிடமிருந்து பயிற்றுனர் சட்டங்களின்படி ஒரு வருடகால பயிற்சி பெற நிகழ்நிலை விண்ணப்பங்கள் (Online Application) வரவேற்கப்படுகின்றன.

மேலும், விவரங்களுக்கு www.boat-srp/com எனும் இணையதள முகவரியினைக் காணவும். நிகழ்நிலை விண்ணப்பங்கள் (Online Application) பெற கடைசி நாள் நவம்பர் 15 /2020 ஆகும்”.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x