Published : 12 Sep 2020 06:39 AM
Last Updated : 12 Sep 2020 06:39 AM

எம்எல்ஏக்களுக்கு கரோனா பரிசோதனை

தமிழக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத் தொடர், சென்னை கலைவாணர் அரங்கில் வரும் செப்.14-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. இதில் பங்கேற்கும் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், அனை வருக்கும் 72 மணி நேரத்துக்கு முன்பு கரோனா பரிசோதனை கட்டாயம் என பேரவைச் செயலகம் அறிவித்திருந்தது.

அதன்படி, முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு அவரவர் வீடுகளில் கரோனா பரிசோதனை மேற் கொள்ளப்பட்டது.

பத்திரிகையாளர்களுக்கு தலைமைச் செய லக வளாகத்தில் நேற்று கரோனா பரிசோத னைக்கான மாதிரிகள் எடுக்கப்பட்டன. அதே போல், சட்டப்பேரவை உறுப்பினர்கள் விடுதி யில், அங்கு தங்கியுள்ள உறுப்பினர்களுக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டன. பேரவைச் செயலக அலுவலர்களுக்கு இன்று கரோனா மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x