Published : 04 Sep 2020 11:29 AM
Last Updated : 04 Sep 2020 11:29 AM

வசந்தகுமார் மறைவு: கன்னியாகுமரி மக்களவை தொகுதி காலியானதாக அறிவிப்பு

ஹெச்.வசந்தகுமார்: கோப்புப்படம்

சென்னை

கரோனா பாதிப்பால் ஹெச்.வசந்தகுமார் காலமானதையடுத்து, கன்னியாகுமரி மக்களவை தொகுதி காலியானதாக மக்களவை செயலகம் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது. இதனால் அடுத்த 6 மாதத்துக்குள் கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில், கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பாக ஹெச்.வசந்தகுமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்நிலையில், ஹெச்.வசந்தகுமாருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஹெச்.வசந்தகுமார், சிகிச்சை பலனின்றி கடந்த ஆக. 28-ம் தேதி காலமானார்.

இதனால் கன்னியாகுமரி மக்களவை தொகுதி காலியானது. இதனை அதிகாரப்பூர்வமாக மக்களவை செயலகம் இன்று (செப். 4) அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, மக்களவை செயலகம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், ஹெச்.வசந்தகுமார் மறைவால் கன்னியாகுமரி மக்களவை தொகுதி காலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த 6 மாதத்துக்குள் கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும். கன்னியாகுமரி மக்களவை தொகுதி காலியானது குறித்த அறிவிப்பு தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x