Published : 29 Aug 2020 07:11 PM
Last Updated : 29 Aug 2020 07:11 PM

தமிழகத்தில் இன்று 6,352 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 1,285 பேர் பாதிப்பு: ஒரே நாளில் 87 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று புதிதாக 6,352 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 15 ஆயிரத்து 590 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக 1,285 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 33 ஆயிரத்து 173 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு குறித்து இன்று (ஆக.29) தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள விவரங்கள்:

"தமிழகத்தில் இன்று புதிதாக 6,352 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுள் ஆண்கள் 3,881 பேர். பெண்கள் 2,471 பேர்.

தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 15 ஆயிரத்து 590 ஆக உயர்ந்துள்ளது. இவர்களுள் ஆண்கள் 2 லட்சத்து 51 ஆயிரத்து 13 பேர். பெண்கள் 1 லட்சத்து 64 ஆயிரத்து 548 பேர். மாற்றுப்பாலினத்தவர்கள் 29 பேர்.

இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுள் 0-12 வயதுடையவர்கள் 19 ஆயிரத்து 323 பேர். 13-60 வயதுடையவர்கள் 3 லட்சத்து 42 ஆயிரத்து 485 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 53 ஆயிரத்து 782 பேர்.

இன்று மட்டும் 80 ஆயிரத்து 988 மாதிரிகளுக்குக் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 46 லட்சத்து 54 ஆயிரத்து 797 மாதிரிகளுக்குக் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

இன்று மட்டும் 78 ஆயிரத்து 973 தனிநபர்களுக்குக் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 44 லட்சத்து 99 ஆயிரத்து 670 தனிநபர்களுக்குக் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

இன்று தனியார் மருத்துவமனைகளில் 28 பேர் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 59 பேர் என 87 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 7,137 ஆக உயர்ந்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களுள் ஏற்கெனவே இணை நோய்கள் உள்ளவர்கள் 82 பேர். இணை நோய்கள் அல்லாதவர்கள் 5 பேர்.

தற்போது வரை 52 ஆயிரத்து 726 பேர் (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட) சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் இன்று 6,045 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 3 லட்சத்து 55 ஆயிரத்து 727 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் இன்று கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் சென்னையில் அதிகபட்சமாக 1,285 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 33 ஆயிரத்து 173 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 1,159 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தமாக, 1 லட்சத்து 16 ஆயிரத்து 808 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 2,712 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை 13 ஆயிரத்து 653 பேர் (வீட்டில் சிகிச்சை பெறுவோர் உட்பட) சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் அரசு சார்பாக 63, தனியார் சார்பாக 86 என 149 கரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன".

இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x