Published : 04 Sep 2015 08:59 AM
Last Updated : 04 Sep 2015 08:59 AM
கல்வி, வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி திருநங்கைகள் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர்.
கல்வி, வேலைவாய்ப்பு, வீட்டு மனைகள் ஒதுக்குதல் உட்பட பல அடிப்படை தேவைகளில் திருநங்கைகளுக்கும் தனியாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல ஆண்டுகளாக திருநங்கைகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் முக்கிய சாலை சந்திப்புகளில் பிச்சை எடுக்கும் போராட்டத்தை திருநங்கைகள் நேற்று நடத்தினர்.
எக்ஸ்பிரஸ் அவென்யூ சாலை சந்திப்பு, ஸ்பென்சர் சாலை சந்திப்பு, எழும்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள சிக்னல் ஆகிய இடங்களில் 10-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கோரிக்கை பதாகைகளை கைகளில் ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் போராட்டம் நடத்தப்பட்டதால் போலீஸார் அவர்களை கைது செய்யவில்லை. கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்தப்போவதாக திருநங்கைகள் அறிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT