Published : 12 Jun 2020 07:21 AM
Last Updated : 12 Jun 2020 07:21 AM

போலி இ-பாஸ் தயாரித்த இணையதள மையத்துக்கு ‘சீல்’ துணை ஆட்சியர், நகராட்சி ஆணையர் நடவடிக்கை

காரைக்கால்

கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மூலம் தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலப் பகுதிகளுக்கு அத்தியாவசிய தேவைகளுக்காக செல்ல இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் இ-பாஸ் சான்று களின் எண்களை பரிசோதனை செய்தபோது, போலி எண்களுடன் இ-பாஸ் இருப்பது தெரிய வந்தது.

இதுதொடர்பாக ஆய்வு செய்தபோது, காரைக்கால் மெய்தீன்பள்ளி வீதியில் உள்ள இணையதள மையம் ஒன்றில் போலியாக இ-பாஸ் தயாரித்து வழங்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, காரைக்கால் துணை ஆட்சியர் (பேரிடர் மேலாண்மை) எஸ்.பாஸ்கரன், காரைக்கால் நகராட்சி ஆணையர் எஸ்.சுபாஷ் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் நேற்று இணையதள மையத்தில் சோதனை செய்தனர். அப்போது, அங்கு போலியாக இ-பாஸ் அச்சடித்து வைத்திருந்ததும், விநியோகம் செய்திருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து, அங்கிருந்த கம்ப்யூட்டர், பிரிண்டர் மற்றும் அச்சடித்து வைக்கப்பட்டிருந்த இ-பாஸ்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து கடைக்கு சீல் வைத்தனர்.

காரைக்கால் நகர போலீ ஸார், இணையதள மைய உரிமையாளர் உட்பட 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x