போலி இ-பாஸ் தயாரித்த இணையதள மையத்துக்கு ‘சீல்’ துணை ஆட்சியர், நகராட்சி ஆணையர் நடவடிக்கை

போலி இ-பாஸ் தயாரித்த இணையதள மையத்துக்கு ‘சீல்’ துணை ஆட்சியர், நகராட்சி ஆணையர் நடவடிக்கை
Updated on
1 min read

கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மூலம் தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலப் பகுதிகளுக்கு அத்தியாவசிய தேவைகளுக்காக செல்ல இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் இ-பாஸ் சான்று களின் எண்களை பரிசோதனை செய்தபோது, போலி எண்களுடன் இ-பாஸ் இருப்பது தெரிய வந்தது.

இதுதொடர்பாக ஆய்வு செய்தபோது, காரைக்கால் மெய்தீன்பள்ளி வீதியில் உள்ள இணையதள மையம் ஒன்றில் போலியாக இ-பாஸ் தயாரித்து வழங்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, காரைக்கால் துணை ஆட்சியர் (பேரிடர் மேலாண்மை) எஸ்.பாஸ்கரன், காரைக்கால் நகராட்சி ஆணையர் எஸ்.சுபாஷ் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் நேற்று இணையதள மையத்தில் சோதனை செய்தனர். அப்போது, அங்கு போலியாக இ-பாஸ் அச்சடித்து வைத்திருந்ததும், விநியோகம் செய்திருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து, அங்கிருந்த கம்ப்யூட்டர், பிரிண்டர் மற்றும் அச்சடித்து வைக்கப்பட்டிருந்த இ-பாஸ்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து கடைக்கு சீல் வைத்தனர்.

காரைக்கால் நகர போலீ ஸார், இணையதள மைய உரிமையாளர் உட்பட 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in