Published : 09 Feb 2020 11:25 AM
Last Updated : 09 Feb 2020 11:25 AM

சேலம் வாழப்பாடியில் 13 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய கிரிக்கெட் மைதானம்: முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்

சேலம் வாழப்பாடியில் 13 ஏக்கர் பரப்பளவில் ரூ.8 கோடி மதிப்பிலான புதிய கிரிக்கெட் மைதானத்தை முதலமைச்சர் பழனிசாமி ஞாயிறன்று திறந்து வைத்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, உதயகுமார், தங்கமணி மற்றும் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராகுல் திராவிட், பி.சி.சி.ஐ.யின் முன்னாள் தலைவர் சீனிவாசன், ரூபா குருநாத் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய திராவிட், எதிர்கால தலைமுறையினருக்கு இது படிக்கல்லாக அமையும். அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்கள் சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்துதான் வர இருக்கின்றனர்.

சேலத்தில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மைதானத்தில் என்னால் விளையாட முடியவில்லை என்பது வருத்தமளிக்கிறது என கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x