Published : 25 Jul 2015 12:40 PM
Last Updated : 25 Jul 2015 12:40 PM
கலப்பு திருமணம் செய்ததால் ஊரை விட்டு தள்ளிவைத்துள்ளதாக ஆட்சியர் அலுவலகத்தில் கணவன், மனைவி புகார் அளித்தனர்.
இதுகுறித்து, பனப்பாக்கம் மேலபுலம் பகுதியைச் சேர்ந்த யுவண்யா (23) அளித்த மனுவில், ‘‘நான் பார்த்தீபன் என்பவரை கடந்த ஓராண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டேன். இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள். பெற்றோர் எதிர்ப்பையும் மீறி திருமணம் கொண்டதால் எங்களை கிராமத்தை விட்டு ஊர் நாட்டாண்மைக்காரர்கள் தள்ளி வைத்தனர்.
எங்களுக்கு ஜஸ்வந்த் என்ற எட்டு மாத ஆண் குழந்தை உள்ளது. டீ கடையில் குழந்தைக்கு பால் வாங்க முடியவில்லை. எங்களுக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகிறது’’ என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT