Published : 21 Oct 2019 10:49 AM
Last Updated : 21 Oct 2019 10:49 AM
புதுச்சேரி
புதுச்சேரி காமராஜர் நகரில் இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. பதற்றமான 7 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காலை 9 மணி நிலவரப்படி 9.66% வாக்குகள் பதிவாகியுள்ளன.
புதுச்சேரி காமராஜர் நகர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பாக ஜான்குமார், என்.ஆர்.காங்கிரஸ் சார்பாக புவனேஷ்வரன், நாம் தமிழர் கட்சி சார்பாக பிரவீணா, மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் சார்பாக வெற்றிச்செல்வன் உட்பட 9 பேர் களத்தில் உள்ளனர்.
வாக்குப்பதிவு இன்று (அக்.21) நடைபெறுகிறது. இடைத்தேர்தலில் 32 வாக்குச்சாவடிகள் உள்ளன. அங்கு போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக பதற்றமான 7 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இத்தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 35,009. 17,047 ஆண் வாக்காளர்களும், 17,961 பெண் வாக்காளர்களும், 1 மூன்றாம் பாலின வாக்காளரும் உள்ளனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரம் இத்தொகுதியில் அமைந்துள்ள 32 வாக்குச்சாவடிகளிலும் உள்ளன.
தேர்தலுக்காக மொத்தம் 158 வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கியது. காலை 9 மணி நிலவரப்படி 9.66% வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்குப்பதிவு முடிந்தவுடன் இயந்திரங்கள் மோதிலால் நேரு அரசு தொழில்நுட்ப கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்படும். பாதுகாப்பு அறையைச் சுற்றி மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு சிசிடிவி கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
செ.ஞானபிரகாஷ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT