Last Updated : 25 Sep, 2019 01:15 PM

 

Published : 25 Sep 2019 01:15 PM
Last Updated : 25 Sep 2019 01:15 PM

விக்கிரவாண்டி அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் யார்?

விழுப்புரம்

விக்கிரவாண்டி தொகுதிஅதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன், அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இரு தொகுதிகளிலும் போட்டியிட விரும்பும் அதிமுகவினரிடம் இருந்து கடந்த செப்.22 மற்றும் 23 ஆகிய இரு நாட்களும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. அவர்களிடம் நேர்காணலும் நடத்தப்பட்டது. இதில், ஒரு தொகுதிக்கு 3 பேர் என பட்டியல் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், இரு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

அதன்படி, அதிமுக சார்பில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றியக் கழகச் செயலாளராக இருக்கும் எம்.ஆர்.முத்தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார்.

விழுப்புரம் அருகே கல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தமிழ்ச்செல்வன். இவரின் தந்தை பெயர் ரங்கநாதன். முத்தமிழ்ச்செல்வன் ஆசிரியர் பட்டயப் படிப்பு முடித்துள்ளார். அவரின் மனைவி அமுதா சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களுக்கு பிரபாகரன் என்ற மகனும், மகளும் உள்ளனர்.

விவசாயத்தைப் பிரதான தொழிலாகக் கொண்டுள்ள முத்தமிழ்ச்செல்வன், சாதிக்கட்சி ஒன்றில் முன்பு பொறுப்பாளராக இருந்துள்ளார். 1997 முதல் 2015 வரை ஒன்றிய ஜெயலலிதா பேரவைச் செயலாளராகவும், 2011 முதல் 2016 வரை கானை ஒன்றிய துணை பெருந்தலைவராகவும் பதவி வகித்துள்ளார். முத்தமிழ்ச்செல்வன் தற்போது காணை ஒன்றியச் செயலாளராகப் பதவி வகிக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x