Published : 14 Sep 2019 07:28 AM
Last Updated : 14 Sep 2019 07:28 AM
சென்னை
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ந.புவியரசன் கூறியதாவது:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச் சலனம் காரணமாக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் அடுத்த சில தினங்களுக்கு ஒருசில இடங்களில் மிதமான மழைபெய்ய வாய்ப்புள்ளது. கடலூர்,விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், வரும் 15, 16 தேதிகளில் வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உரு வாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது, சென் னைக்கு தெற்கே நெருங்கிவர வாய்ப்புள்ளது. அதன் காரணமாக வரும் 17-ம் தேதி வாக்கில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT