Published : 30 Aug 2019 09:54 AM
Last Updated : 30 Aug 2019 09:54 AM
நாமக்கல்
திருச்செங்கோடு அருகே ஈச்சிக்காடு என்ற கிராமத்தில் குப்பையில் வீசப்பட்ட பெண் குழந்தை மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே எலச்சி பாளையத்தில் இருந்து ராமபுரம் செல்லும் சாலையில் ஈச்சிக்காடு என்ற இடத்தில் நேற்று மதியம் 1.30 மணியளவில் பச்சிளங் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. அந்த வழியே சென்ற மக்கள் சத்தம் கேட்ட இடம் நோக்கி சென்றபோது, அங்கு குப்பைகளுக்கு நடுவே பிறந்து ஓரிரு நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை கிடந்துள்ளது.
எறும்புகள் கடித்தபடி இருந்த குழந்தையை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள், குழந்தையை உடனடியாக மீட்டனர். 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, குழந்தையை திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் குறித்து எலச்சிபாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து குழந்தையை குப்பையில் வீசிச் சென்றவர்கள் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT