Published : 24 Aug 2019 08:53 AM
Last Updated : 24 Aug 2019 08:53 AM
சென்னை
சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அடுத்த சில தினங்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் ஒருசில இடங் களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாத புரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், பெரம்பலூர், அரியலூர், கடலூர், நீலகிரி, கோவை, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் சில இடங் களில் மழைக்கு வாய்ப்புள் ளது. சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலா, நாகப்பட்டினம், அம்மாவட்டத்தில் உள்ள அணைக்காரன்சத்திரம், திருவாரூர் மாவட்டம் வலங்கை மான் ஆகிய இடங்களில் தலா 5 செமீ, கோவை மாவட்டம் சின்னக்கள்ளார், கிருஷ்ணகிரி மாவட்டம் பெனுகொண்டபுரம், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஆகிய இடங்களில் தலா 4 செமீ மழை பெய்துள்ளது.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT