Published : 07 Aug 2019 08:55 AM
Last Updated : 07 Aug 2019 08:55 AM

பள்ளிகள், அரசு அலுவலகங்களில் கொண்டாடப்படும் சுதந்திர தின விழாவில் பிளாஸ்டிக் கொடிகளை பயன்படுத்த வேண்டாம்: மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தல்

ச.கார்த்திகேயன்

சென்னை

அனைத்து பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழாக்களின்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கொடி களை பயன்படுத்த வேண்டாம் என்று தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

அரசு மற்றும் தனியார் பள்ளி கள் மற்றும் அரசு அலுவலகங்களில் ஆண்டுதோறும் சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. அவற்றில் பிளாஸ்டிக் கொடி தோரணங்கள், தனி பிளாஸ்டிக் கொடிகள், ஆடையில் குத்திக் கொள்ளும் பிளாஸ்டிக் கொடிகள் ஆகியவை பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் அந்த விழாக்களில் பிளாஸ்டிக் உறைகள், பிளாஸ்டிக் உறையிடப்பட்ட பேப்பர் தட்டுகள் மூலம் நொறுக்கு தீனி வகைகள் விநியோகிக்கப்படுகின்றன. பிளாஸ்டிக் ஸ்பூன்கள், பிளாஸ் டிக் குவளைகளும் பயன்படுத்தப் படுகின்றன. மேலும், பிளாஸ்டிக் தேசிய கொடிகள் பயன்படுத்தப் பட்டு, அவை தூக்கியெறியப் படுகின்றன. சிலர் குப்பை என தீயிட்டு எரித்துவிடுகின்றனர். இது தேசிய கொடியை அவமதிப்பது போன்றது.

தமிழகத்தில் கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல், ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. இதனால் சுதந்திரதின விழாவின்போது தடை செய்யப் பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை, அனைத் துத் துறை செயலர்களுக்கும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தனித்தனி யாக கடிதம் அனுப்பியுள்ளது.

அந்தக் கடிதத்தில் கூறியிருப்ப தாவது: தமிழகத்தில் ஏற்கெனவே 14 வகையான பிளாஸ்டிக் பொருட் களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பாக மாசுகட்டுப் பாட்டு வாரியம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கண் காட்சிகள், கலை நிகழ்ச்சிகள், பேரணிகள் உள்ளிட்டவை நடத்தப் பட்டுள்ளன. சுதந்திரக் காற்றை சுவாசிக்கக் காரணமாக இருந்த அந்த சுதந்திர தினத்தை கொண் டாடுவது நம் அனைவரின் உரிமை.

இந்த நாளில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன் படுத்துவதை தவிர்க்க வேண்டும். அனைத்து பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் சுதந்திரதின விழாக்களை கொண்டாடும்போது பிளாஸ்டிக் கொடிகள் பயன்படுத் துவதை தவிர்க்க வேண்டும். காகி தம், துணியால் ஆன கொடிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

அவற்றை சாலையோரங்களில் வீசி எறிந்துவிட்டு செல்வதை தவிர்க்க வேண்டும். அதை முறை யாக அப்புறப்படுத்த வேண்டும். இது தொடர்பாக பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இது தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித் துறை உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதங்களில் கூறப்பட்டுள் ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x