Last Updated : 06 Aug, 2019 05:26 PM

 

Published : 06 Aug 2019 05:26 PM
Last Updated : 06 Aug 2019 05:26 PM

12 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம்: காலி குடங்களுடன் விருதுநகர் 1-வது வார்டு பெண்கள் போராட்டம்

விருதுநகரில் முறையாக குடிநீர் வராததைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் காலி குடங்களுடன் தர்ணாவில் ஈடுபட்டனர்.

விருதுநகர் 1-வது வார்டுக்கு உட்பட்ட ரங்கநாதபுரம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் சுமார் 12 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் ஓரிரு குடங்கள் மட்டுமே வழங்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில் குடிநீர் வழங்கப்பட்டபோது ஒரு குடம் குடிநீர்கூட குழாயில் வரவில்லையாம்.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் விருதுநகர் அகமதுநகர் சாலையில் காலிக் குடங்களுடன் திரண்டு சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் மற்றும் நகராட்சி அலுவலர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்பொழுது உடனடியாக குடிநீர் வழங்கக்கோரி அப்பகுதியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் கீழ் காலி குடங்களுடன் அமர்ந்து ஏராளமான பெண்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

அதையடுத்து லாரிகள் மூலம் குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர். அதன் பின்னர் போராட்டத்தை கைவிட்டு பொது மக்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x