Published : 28 Jul 2015 08:44 AM
Last Updated : 28 Jul 2015 08:44 AM

ஆதி திராவிடர் பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல் இடமாறுதல் கலந்தாய்வு

ஆதி திராவிடர் நலப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆன்லைன் வழியிலான இடமாறு தல் கலந்தாய்வு வருகிற 29, 30-ம் தேதிகளில் (புதன், வியாழன்) அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மேல்நிலைப் பள்ளி, உயர் நிலைப்பள்ளி, நடுநிலைப் பள்ளி, ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் , கணினி ஆசிரியர்கள், உடல்கல்வி இயக்குநர்கள் ஆகியோருக்கு 2015-16-ம் கல்வி ஆண்டுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வு 29-ம் தேதி (புதன்கிழமை) அன்றும் பட்டதாரி ஆசிரியர்கள், தமிழாசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், உடல்கல்வி ஆசிரியர்கள் ஆகியோருக்கு 30-ம் தேதி (வியாழக்கிழமை) அன்றும் காலை 10 மணியளவில் அந்தந்த மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x