Published : 14 Jun 2015 11:25 AM
Last Updated : 14 Jun 2015 11:25 AM

பாலியல் புகார்: தலைமை ஆசிரியர் கைது

தருமபுரி அடுத்த மாட்டியாம் பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றியவர் சின்னமாது. இவர் அந்தப் பள்ளி மாணவி களிடம் தவறான முறையில் நடக்க முயன்றதாக புகார் எழுந் தது. கல்வித்துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் புகார் உண்மை என உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து அவர் நேற்று முன்தினம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அன்றைய தினம் இரவே அவர் மீது போக்ஸோ (பாலியல் தொல்லைகளில் இருந்து சிறார்களை பாதுகாக் கும் சட்டம் 2012) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று காலை அவர் தருமபுரி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சரணடைந் தார். அவரை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத் தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x