Published : 01 Jun 2015 12:42 PM
Last Updated : 01 Jun 2015 12:42 PM
தமிழகத்தில் சென்னை உள்பட அனேக மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் திங்கட்கிழமை காலை முதல் மிதமான வானிலை நிலவுகிறது. இந்த நிலையில் தமிழக தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் எனவும் வட மாவட்டங்களில் பரவலான மழை இருக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதே போல, சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், ஆங்காங்கே மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் வரும் 5-ஆம் தேதி பருவ மழை தொடங்க வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் தாக்கமாக தமிழகத்தின் பரவலான பகுதிகளில் மழை பெய்யக் கூடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT