Published : 23 May 2015 07:34 AM
Last Updated : 23 May 2015 07:34 AM

திமுக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகேயுள்ள பட்டாபிராமை அடுத்த தண்டுரை வள்ளலார் நகரைச் சேர்ந்தவர் தாஸ் (52). திமுகவின் ஆவடி பகுதி 41-வது வட்டச் செயலராக உள்ளார்.

ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் தாஸ், நேற்று அதிகாலை வள்ளலார் நகர் பிரதான சாலைப் பகுதியில் ‘சைக்கிளிங்’ சென்றுவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, முகத்தை துணியால் மூடியவாறு வந்த 3 பேர், தாஸை வழிமறித்து, அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர்.

பலத்த காயங்களுடன் சரிந்து விழுந்த தாஸை, பட்டாபிராம் போலீஸார் வந்து மீட்டு சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்தக் கொலை முயற்சி தொடர்பாக போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x