Published : 23 May 2015 07:27 AM
Last Updated : 23 May 2015 07:27 AM

பிஎஸ்என்எல் தலைமை பொது மேலாளர் பொறுப்பேற்பு

பிஎஸ்என்எல் சென்னை தொலைத் தொடர்பு வட்டத்தின் புதிய தலைமை பொது மேலாளராக எஸ்.எம்.கலாவதி பொறுப்பேற்றுள்ளார்.

பிஎஸ்என்எல் சென்னை தொலைத்தொடர்பு வட்டத்தின் புதிய பொது மேலாளராக எஸ்.எம்.கலாவதி நியமிக்கப்பட்டுள்ளார். 1981-ம் ஆண்டு இந்திய தொலைத் தொடர்பு சேவை அணியை சேர்ந்த கலாவதி, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் பொது மேலாளராக பணி புரிந்துள்ளார். கடந்த 2012-ம் ஆண்டு சென்னை தொலைத்தொடர்பு வட்டத்தில் பணிக்கு சேர்ந்தார். தலைமை பொது மேலாளராவதற்கு முன்பு சென்னை தொலைத்தொடர்பு வட்டத்தின் மூத்த பொது மேலாளராக அவர் பணி புரிந்து வந்தார். தொலைத்தொடர்பு வட்டத்துக்கு தலைமை பொது மேலாளராக பொறுப்பேற்றுள்ள முதல் பெண் கலாவதி ஆவார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x