Published : 21 Apr 2015 10:12 AM
Last Updated : 21 Apr 2015 10:12 AM

சென்னை உயர் நீதிமன்றத்தில் போலி வழக்கறிஞர் கைது

உயர் நீதிமன்ற வளாகத்தில் போலி வழக்கறிஞர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் அதிகாரியாக இருப்பவர் முகுந்தன். இவரது சொந்த பிரச்சினை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு உள்ளது. இந்நிலை யில் எஸ்.எஸ்.செந்தில் என்பவ ரின் அறிமுகம் முகுந்தனுக்கு கிடைத்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருப்பதாக தன்னை அறிமுகப் படுத்திக் கொண்ட செந்தில், முகுந்தனின் வழக்கை எடுத்து நடத்துவதாக கூறி, அவரிடம் இருந்து ரூ.5 லட்சம் வாங்கி யிருக்கிறார்.

இந்நிலையில், செந்திலின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த முகுந்தன், சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நேரில் வந்து விசாரிக்க, எஸ்.எஸ்.செந்தில் என்பவர் வழக்கறிஞராகவே இல்லை என்பது தெரியவந்தது. இதுகுறித்து உயர் நீதிமன்ற காவல் நிலையத்தில் முகுந்தன் புகார் கொடுத்தார்.

புகாரின்பேரில், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் சுற்றிய எஸ்.எஸ்.செந்திலை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அவர் அண்ணா நகர் 6-வது அவென்யூ, 8-வது தெருவில் வசிப்பதும், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதும் தெரிந்தது. அதைத் தொடர்ந்து எஸ்.எஸ்.செந்திலை போலீஸார் கைது செய்தனர். ஆள்மாறாட்டம் செய்தல், பண மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல இவர் வேறு யாரிடமும் மோசடி செய்திருக்கிறாரா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x