Published : 14 Mar 2015 11:23 AM
Last Updated : 14 Mar 2015 11:23 AM

சென்னையில் பார்வையற்ற பட்டதாரிகள் கைது

சென்னை கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே மறியலில் ஈடுபட்ட பார்வையற்ற பட்டதாரிகள் கைதுசெய்யப்பட்டனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்வான பார்வையற்ற பட்டதாரிகளுக்கு பணி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாததால் பார்வையற்ற பட்டதாரிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே மறியலில் ஈடுபட்டனர். இவர்களை போலீஸார் கைதுசெய்தனர்.

திருச்சி ரயில்வே நிலையம் சந்திப்பு அருகிலும் பார்வையற்ற பட்டதாரிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x