Published : 20 Mar 2015 09:22 AM
Last Updated : 20 Mar 2015 09:22 AM
சென்னை வியாசர்பாடி அன்னை இந்திரா காந்தி நகரில் உள்ள குடிசைப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதில் 15-க்கும் அதிகமான குடிசைகள் எரிந்து நாசமாயின. தகவல் அறிந்ததும் வியாசர்பாடி எஸ்.எம் நகர், எழில்நகர், தண்டையார்பேட்டை, செம்பியம் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் 10-ம் வகுப்பு படிக்கும் அஜீத்குமார் என்ற மாணவரின் வீடு முற்றிலும் எரிந்து விட்டது.
வீட்டுக்குள் வைத்திருந்த அவரது புத்தகப்பையும் சாம்பலா னது. அதில்தான், தனது ஹால் டிக்கெட்டை வைத்திருந்தார்.
இந்நிலையில், 10-ம் வகுப்பு தேர்வு நேற்று தொடங்கியது. ஹால்டிக்கெட் இல்லாமல் எப்படி பள்ளிக்குச் செல்வது என்று அஜீத்குமார் தவித்துக் கொண்டிருந்தார். இதையறிந்த அப்பகுதி கவுன்சிலர் ஜெ.கே.ரமேஷ், அந்த மாணவரை பள்ளிக்கு அழைத்துச் சென்றார். நடந்த சம்பவங்களை பள்ளி முதல் வரிடம் விளக்கிக் கூறினார். பின்னர், தற்காலிக ஹால்டிக் கெட் தயார் செய்து கொடுக்கப் பட்டதையடுத்து, அந்த மாணவர் தேர்வு எழுதினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT