Published : 11 Apr 2014 10:48 AM
Last Updated : 11 Apr 2014 10:48 AM
சென்னையில் சாலை சந்திப்புகளில் சிக்னலில் நிற்கும்போது வாக்காளர்களின் கவனத்தை ஈர்க்க சென்னை மாவட்ட தேர்தல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி பிரதான சாலை களில் உள்ள போக்குவரத்து மின்னணு பலகையில் வாக்காளர் விழிப்புணர்வு செய்திகள் திரையிடப்படும். சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகளுக்கு பயனளிக்கும் வகையில் இது அமையும்.
கடந்த தேர்தலில் தமிழ்நாட்டிலேயே சென்னையில்தான் குறைந்த அளவில் (62 சதவீதம்) வாக்குகள் பதிவாகின. எனவே இந்த தேர்தலில் அதுபோன்ற நிலை ஏற்படாமல் தடுக்க சென்னை மாவட்ட தேர்தல் துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சென்னையில் 471 பேருந்து தட சாலைகள் உள்ளன. இவற்றில் உள்ள மின்னணு தகவல் பலகைகளில் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு வாசகங்கள் ஒளிரும். இனி இந்த பலகைகளில் வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்களும் ஒளிரும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT