Published : 21 Mar 2015 09:56 AM
Last Updated : 21 Mar 2015 09:56 AM

குழந்தைகளுக்கு ‘வைட்டமின் ஏ’ மருந்து வழங்கும் முகாம்: மார்ச் 23-ல் தொடக்கம்

சென்னை மாநகராட்சி சார்பில் 6 மாதம் முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான வைட்டமின் ஏ திரவ மருந்து வழங்கும் முகாம் மார்ச் 23-ம் தேதி தொடங்குகிறது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

6 மாதம் முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ குறைவால் ஏற்படும் குறைபாடுகளை தவிர்க்கும் பொருட்டு சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இம்முகாம் சென்னை மாவட்ட குடும்ப நலத்துறையின் கீழ் இயங்கும் அனைத்து நகர நலவாழ்வு மையங்கள், பதினேழு 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனைகள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மையங்கள் ஆகியவற்றில் மார்ச் 23-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரை (25-ம் தேதி நீங்கலாக) 4 நாட்கள் நடைபெறும்.

இந்நாட்களில் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுக்கு காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை வைட்டமின் ஏ திரவ மருந்து வாய் வழியாக விட்டுச் செல்லலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x