Published : 30 Mar 2015 10:41 AM
Last Updated : 30 Mar 2015 10:41 AM
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய குழு உறுப்பினர்களாக புதுச்சேரி, தமிழகத்தைச் சேர்ந்த 12 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
நேற்று புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தேசியக்குழு உறுப்பினர்களாக 28 மாநிலங்களில் இருந்து 124 பேர் நியமிக்கப்பட்டனர். அதில் தமிழகம், புதுச்சேரியில் இருந்து 12 பேர் இடம் பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் இருந்து நல்லகண்ணு, பாண்டியன், மாநில செயலர் முத்தரசன், மகேந்திரன், சுப்பராயன், வீரபாண்டியன், சேதுராமன், பத்மாவதி, மூர்த்தி, அப்பாதுரை ஆகியோரும், புதுச்சேரியில் இருந்து மாநில செயலர் விஸ்வநாதன், நாரா கலைநாதன் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT