Published : 04 Feb 2015 12:49 PM
Last Updated : 04 Feb 2015 12:49 PM

போலீஸை தாக்கிய எல்லை பாதுகாப்புப் படை வீரர் கைது

ஆர்.கே.பேட்டை அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸாரை தாக்கிய எல்லை பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே. பேட்டை அருகே உள்ள பெரியராமாபுரத்தைச் சேர்ந்தவர் செந்தில் (28). திரிபுரா மாநிலத்தில், எல்லை பாதுகாப்புப் படை வீரராக பணிபுரிந்து வருகிறார். தற்போது, விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு ஆர்.கே.பேட்டை பகுதியில் தனது நண்பரோடு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, சித்தூர்- சோளிங்கர் சாலையில், ராமாபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த, ஆர்.கே.பேட்டை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீஸார் மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

அப்போது, போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செந்தில், மதுபோதையில், போலீஸாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, போலீஸார், அவரை சோளிங்கர் அரசு பொது மருத்துவமனையில் சோதனைக்கு உட்படுத்தியதோடு வழக்கு பதிந்து கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x