Published : 03 Feb 2015 08:18 PM
Last Updated : 03 Feb 2015 08:18 PM
கடந்த ஆறு மாதங்களாக தமிழக அரசு செயலிழந்துள்ளது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் தமிழகத்தில் எந்த வளர்ச்சியும் இல்லை என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்த பின் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் பேசினார்.
’’கடந்த ஆறு மாதங்களாக தமிழக அரசு செயலிழந்துள்ளது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் தமிழகத்தில் எந்த வளர்ச்சியும் இல்லை
ஸ்ரீரங்கம் தொகுதியில் விரைவில் பிரச்சாரம் செய்ய உள்ளேன். திமுக வெற்றிக்குப் பாடுபடும் வகையில் எனது பிரச்சாரம் அமையும். ஸ்ரீரங்கத்தில் திமுக வேட்பாளரை ஆதரிப்பது குறித்து கருணாநிதியிடம் நேரில் கூற வந்தேன்’’ என கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
வரும் 13ம் தேதி அன்று ஸ்ரீரங்கம் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT