Published : 24 Feb 2015 09:05 AM
Last Updated : 24 Feb 2015 09:05 AM
தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மகாமகப் பெரு விழாவின் முன்னோட்டமான இளைய மகாமகத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங் கியது.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாசி மாத பவுர்ணமி நாளில் நடைபெறும் பிரசித்தி பெற்ற கும்பகோணம் மகாமகப் பெருவிழா அடுத்த ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி நடைபெறுகிறது. இதன் முன்னோட்டமாக, வரும் மார்ச் 4-ம் தேதி இளைய மகாமகத் திருவிழா நடைபெறுகிறது.
கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோயிலில் நேற்று கொடிமரத்துக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு, நந்தி சின்னம் வரையப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. இதேபோல, ஆதி கும்பேஸ்வரர் கோயில் மற்றும் அபிமுகேஸ்வரர் கோயில்களிலும் நேற்று கொடியேற்றம் நடை பெற்றது. விழாவையொட்டி, தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது. வரும் மார்ச் 4-ம் தேதி மகாமகக் குளத்தில் காலை 10.30 முதல் 12.30 மணி வரை இளைய மகாமகத் தீர்த்தவாரி நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT