Published : 06 Feb 2015 11:11 AM
Last Updated : 06 Feb 2015 11:11 AM

பகுஜன் சமாஜ் மாவட்டச் செயலாளர் வெட்டிக் கொலை: திருவள்ளூர் அருகே பரபரப்பு

திருவள்ளூர் அருகே உறவினர் திருமணத்துக்கு வந்த பகுஜன் சமாஜ் கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளர், மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய் யப்பட்ட சம்பவம், திருவள்ளூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

சென்னை, புளியந்தோப்பு கன்னிகாபுரம் வெங்கடாபுரம் முதல் தெருவைச் சேர்ந்தவர் தென்னரசு(38). பகுஜன் சமாஜ் கட்சியின் வடசென்னை மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்த இவர், ரவுடி பாம் சரவணனின் சகோதரர். தென்னரசு மீது 3 கொலை வழக்குகள், 9 கொலை முயற்சி வழக்குகள் என 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், தென்னரசு நேற்று காலை 9 மணியளவில், திருவள்ளூர் அருகே உள்ள தாமரைப்பாக்கம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.

திருமணம் முடிந்து அவர் காரில் ஏறும்போது, 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல், கண் ணிமைக்கும் நேரத்தில் தென்ன ரசை அரிவாளால் வெட்டிச் சாய்த்தது. இதைக் தடுக்க வந்த அவரது மனைவி மைதிலிக்கும் வெட்டு விழுந்தது.

உறவினர்கள், தென்னரசை பாடியநல்லூர் தனியார் மருத்துவ மனைக்கு தூக்கிச் சென்றனர். மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு, தென்னரசு ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரி வித்தனர்.

திருவள்ளூர் எஸ்.பி. சாம்சன், ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி. குமரவேல் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். வெங்கல் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கொலையாளிகளைப் பிடிக்க ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி. குமரவேல் தலைமையில் தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தனிப்படை போலீஸின் முதல் கட்ட விசாரணையில், தென்னரசுவிடம் நெருங்கி பழகிய வர்களில் ஒருவன் தலைமையில் கொலை கும்பல் வந்தது தெரியவந்துள்ளது.

கொலையாளிகளை பார்த்த தென்னரசுவின் மனைவி மைதிலி யிடம் போலீஸார் சில புகைப் படங்களை காட்டி, இதில், கொலை கும்பலை சேர்ந்தவர்கள் உள்ளனரா என்று விசாரித்தனர்.

தென்னரசு கொலை செய்யப் பட்ட தகவலால், திருவள்ளூர் பகுதிகளில் பரபரப்பு ஏற்பட் டுள்ளது.

தலைநகர் சென்னையை ஒட்டி யுள்ள திருவள்ளூர் மாவட்டத் தின், செங்குன்றம், வெங்கல், பெரியபாளையம், ஊத்துக் கோட்டை, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் சமீப காலமாக கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் பாதுகாப்பை இன்னும் பலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x