Published : 23 Jan 2015 09:46 AM
Last Updated : 23 Jan 2015 09:46 AM

தேர்தல் ஆணையக் கட்டுப்பாட்டில் வரும் போலீஸ் அதிகாரிகள் யார்?

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையக் கட்டுப்பாட்டில் வரும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரின் பட்டியலை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக உள்துறை முதன்மைச் செயலர் அபூர்வ வர்மா பிறப்பித்த உத்தரவு வருமாறு: தமிழக டி.ஜி.பி, கூடுதல் டி.ஜி.பி., (சட்டம் மற்றும் ஒழுங்கு), மத்திய மண்டல ஐ.ஜி., திருச்சி மாநகரக் காவல்துறை ஆணையர், திருச்சி சரக டி.ஐ.ஜி. மற்றும் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர்கள், புதுக்கோட்டை காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் இந்த அதிகாரிகளின் கீழ் வரும் அனைத்து காவலர்கள் வரையிலும், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள காவலர்கள் ஒவ்வொருவரும், தேர்தல் ஆணையக் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளனர். இவர்கள் இந்த காலக் கட்டத்தில், தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்குட்பட்டு செயல்பட வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x