Published : 23 Jan 2015 08:35 AM
Last Updated : 23 Jan 2015 08:35 AM
‘மாதொருபாகன்’ நாவல் சர்ச்சை தொடர்பான வழக்கில் நாவ லாசிரியர் பெருமாள்முருகன், தனது கருத்தை பிப்ரவரி 9-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.
எழுத்தாளர் பெருமாள் முருகன் 2010-ல் எழுதிய ‘மாதொருபாகன்’ நாவலுக்கு அண்மையில் எதிர்ப்பு கிளம்பியது. நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது.
இதையடுத்து நடத்தப்பட்ட அமைதிக் குழு கூட்டத்தில் நாவல் ஆசிரியர் பெருமாள்முருகனை கட்டாயப்படுத்தி எடுக்கப்பட்ட முடிவு செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத் தலைவர் எஸ்.தமிழ்செல்வன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில், லஜபதிராய் என்பவரும் இதுதொடர்பாக நேற்று ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வு முன்பு இந்த வழக்கை நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
ஏற்கெனவே தமிழ்செல்வன் தொடர்ந்த வழக்கில், ‘மாதொரு பாகன்’ நாவல் ஆசிரியர் பெருமாள் முருகனையும் மனுதாரராக சேர்த் திருப்பதாக அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இன்று லஜபதிராய் தாக்கல் செய்துள்ள மனுவில் பெருமாள்முருகன் எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த வழக்குகளில் எந்த வழக்கில் பெருமாள்முருகன் தனது தரப்பு சட்டப்பூர்வமான வாதத்தை முன்வைக்க விரும்புகிறார் என்பது பற்றி முடிவெடுக்க அவருக்கு உரிமை உள்ளது.
தமிழ்செல்வன் தொடர்ந்துள்ள வழக்கில், பெருமாள்முருகன் பிப்ரவரி 9-ம் தேதிக்குள் தனது கருத்தை தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT