Published : 10 Dec 2014 10:31 AM
Last Updated : 10 Dec 2014 10:31 AM

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் 2 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தென் மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ளது. இது தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி வரை முடிந்த 24 மணி நேரத்தில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் 3 செ.மீ., பாளையங்கோட்டை 1 செ.மீ., மழை பெய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x