Published : 27 Dec 2014 10:47 AM
Last Updated : 27 Dec 2014 10:47 AM

வங்கக் கடலில் மேலும் காற்றழுத்த தாழ்வு பகுதி

வங்கக் கடலில் மேலும் ஒரு காற்ற ழுத்த தாழ்வு பகுதி உருவாகும் நிலை உள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கை கடற்கரை பகுதியில் வியாழக்கிழமை குறைந்த காற்ற ழுத்த தாழ்வு பகுதி உருவானது. தற்போது, தென் கிழக்கு வங்கக் கடலில் அந்த மானுக்கு அருகே மேலும் ஒரு குறைந்த காற்றழுத்த நிலை உருவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால், அடுத்த 48 மணி நேரத்தில் தென் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் உள் மாவட்டங்களில் வறண்ட வானிலை காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x