Published : 17 Jun 2017 09:27 AM
Last Updated : 17 Jun 2017 09:27 AM

எம்எல்ஏக்கள் சந்தித்து ஆலோசனை: மாவட்டவாரியாக நிர்வாகிகளை சந்திக்க டிடிவி தினகரன் திட்டம்

அதிமுகவில் ஓபிஎஸ், முதல்வர் கே.பழனிசாமி அணிகள் தவிர, தற்போது தினகரன் ஆதர வாளர்களான தங்க தமிழ்ச்செல் வன், வெற்றிவேல் உள்ளிட்ட 34 எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள், நிர்வாகிகள் தனி அணியாக செயல் பட்டு வருகின்றனர். சட்டப்பேரவை யில் எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டு வைக்கும்போது, அனைத்து அதிமுக எம்எல்ஏக்களும் ஒன்றாக இருந்தாலும், முதல்வர் பழனிசாமியின் ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் என்ற வகையில் செயல்பாடுகள் தனித்தனியாக தெரிவதுபோல சில நேரங்களில் நடந்துகொள்கின்றனர்.

இந்த நிலையில், தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், செந்தில்பாலாஜி, தோப்பு வெங்கடாசலம், பழனியப்பன் உள்ளிட்ட 30 பேர் நேற்று முன்தினம் மாலை திடீரென முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேசினர். அப்போது, குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவு, எம்ஜிஆர் நூற்றாண்டு விழா ஆகியவற்றில் தினகரனின் பங்கு இருக்க வேண்டும் என்பதை வலி யுறுத்திக் கூறினர். இதைத் தொடர்ந்து, முதல்வர் கே.பழனி சாமி தலைமையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைச் சர்கள், எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் நடந்தது.

இந்நிலையில் நேற்று சட்டப் பேரவை கூட்டத்துக்கு முன்பு எம்எல்ஏக்கள் வெற்றிவேல், மாரி யப்பன் கென்னடி, பாலசுப்பிர மணியன், பழனியப்பன், செந்தில் பாலாஜி, தோப்பு வெங்கடாசலம் ஆகியோர் டிடிவி தினகரனை சந்தித்துப் பேசினர். தொடர்ந்து, விருதுநகர் எம்.பி. ராதாகிருஷ்ண னும் தினகரனை சந்தித்தார்.

முதல்வரைச் சந்தித்தது, மாலை யில் நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டம் தொடர்பான விஷயங்கள் குறித்து அப்போது விவாதிக்கப் பட்டதாகத் தெரிகிறது. மாவட்டந் தோறும் நிர்வாகிகளை சந்தித்துப் பேசவும் தினகரன் திட்டமிட்டுள்ள தாக கூறப்படுகிறது. முதல்கட்ட மாக தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் தேனி மாவட்ட நிர்வாகிகள் தினகரனை நேற்று சந்தித்தனர். தொடர்ந்து இன்று வடசென்னை மாவட்ட நிர்வாகிகள் வெற்றிவேல் தலைமையில் தினகரனை சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x