Published : 05 Aug 2017 08:04 PM
Last Updated : 05 Aug 2017 08:04 PM
காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறுகையில், ''வட ஆந்திர கடலோரப் பகுதி முதல், வடதமிழகத்தின் உள்பகுதி வரை, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதி வழியாக காற்றழுத்த தாழ்வு நிலை நீடித்து வருகிறது. இதன் காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT