Published : 21 Aug 2017 09:42 PM
Last Updated : 21 Aug 2017 09:42 PM

ஜெயலலிதாவின் ஆன்மா சசிகலாவை ஒதுக்கச் சொல்லாது: திவாகரன்

ஜெயலலிதாவின் ஆன்மா அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை ஒதுக்கச் சொல்லாது என்று திவாகரன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் சகோதரரான திவாகரன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், ''முதல்வர் பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், இவர்கள் தங்கள் பதவியைக் காப்பாற்றிக் கொள்ளவே இணைந்துள்ளனர். அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கப் போவதாகவும், இதற்காக பொதுக்குழுவை கூட்ட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

பொதுக்குழுவை கூட்ட பொதுச் செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. மேலும், சசிகலாவை சிறையில் வைக்க அவர்களே காரணம். மேலும், ஒட்டுமொத்த துரோகத்தின் உச்சகட்டமாக இது உள்ளது. மறைந்த ஜெயலலிதாவின் ஆன்மா சசிகலாவை ஒதுக்கச் சொல்லாது'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x