Published : 17 Nov 2014 09:59 AM
Last Updated : 17 Nov 2014 09:59 AM

முன்னாள் குழந்தை தொழிலாளர்களுக்காக வேலைவாய்ப்பு முகாம்

முன்னாள் குழந்தை தொழிலாளர்களுக்காக சென்னையில் நேற்று நடந்த வேலைவாய்ப்பு முகாமில் சுமார் 404 பேருக்கு வேலை கிடைத்தது.

அருணோதயா குழந்தை தொழிலாளர் மையம் சார்பில் சென்னை கொருக்குபேட்டையில் நேற்று சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் சுமார் 25 நிறுவனங்கள் கலந்து கொண்டன. 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த சுமார் 720 இளைஞர்கள் இதில் பங்கேற்றனர். அவர்களில் 150 பேர்களுக்கு வெவ்வேறு நிறுவனங்களில் வேலை கிடைத்தது.

இந்த வேலைவாய்ப்பு முகாம் குறித்து அருணோதயா குழந்தை தொழிலாளர் மையத்தின் நிர்வாக இயக்குநர் வெர்ஜில்லா டி.சாமி கூறும்போது, “எங்கள் மையம் சார்பாக கடந்த 22 ஆண்டுகளில் ஆறாயிரம் குழந்தை தொழிலாளர்களை மீட்டுள்ளோம். அவ்வாறு மீட்கப்பட்டு தற்போது படிப்பை முடித்துள்ள முன்னாள் குழந்தை தொழிலாளர்கள் மற்றும் கொருக்பேட்டையில் வேலை கிடைக்காமல் இருக்கும் இளைஞர்களுக்காக இந்த சிறப்பு வேலைவாய்ப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x