Published : 30 Jul 2017 10:12 AM
Last Updated : 30 Jul 2017 10:12 AM
ஆகஸ்ட் 16-ம் தேதி விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் திமுக வினர் திரளாக பங்கேற்பார்கள் என அக்கட்சியின் விவசாய அணி செயலாளர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று கூறியதாவது:
திமுக விவசாய அணி மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டம் சமீபத் தில் நடந்தது. அதில், காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க வேண்டும், தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யவும் பயிர்க் காப்பீட்டு தொகையை வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை யில் உள்ள ரூ.2,000 கோடியை வழங்க தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு அரசு உத்தரவிட வேண்டும். கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,500 வழங்க பரிந்துரைக்க வேண் டும் என்பன உள்ளிட்ட தீர்மானங் களை நிறைவேற்றியுள்ளோம்.
மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கங் கள் ஆகஸ்ட் 16-ம் தேதி நடத்தும் பேரணி, ஆர்ப்பாட்டத்துக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT