Published : 30 Jul 2017 10:48 AM
Last Updated : 30 Jul 2017 10:48 AM

சென்னையில்3 போலீஸாருக்குடெங்கு காய்ச்சல்?

சென்னையில் 3 போலீஸார் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் பணிபுரிபவர் ஷிபு (35). ஆயுதப்படையில் பணிபுரிபவர் பார்த்திபன் (27). கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வந்த இவர்கள், தனி யார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். காய்ச் சல் குறையாததால் நேற்று முன்தினம் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்ததால், அவர்களின் ரத்த மாதிரிகள் சோதனைக் காக அனுப்பப்பட்டுள்ளன.

இந்நிலையில், சக்திவேல் என்ற காவலரும் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x